இடுகைகள்

பிப்ரவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடிதம் சிறுகதை

கடிதம் சிறுகதை "இன்னும் கொஞ்ச நாள்ல   ஜீவா வயசு க்கு வந்துற்வா இப்பவே அடிவயிறு வலிக்குதுன்றா இவனுக்கும் கொஞ்சம் வெவரம் தெரிய   ஆரம்பிச்சிருச்சு . அம்மா இருக்கும் வீட்டை எனக்கு குடுக்க  அண்ணனும்  சரின்ருக்கான் நான் போறேன் சிம் மாத்திட்டேன் போன் பண்ணவேணாம்."  கடும்கோடையின் இரவு...   பகலில் உறிஞ்சிய வெப்பத்தை இரவில் துப்பிக்கொண்டிருந்தன வீட்டின் சுவர்கள். குடிசையின் புழுக்கத்தோடு காற்றின் வெப்பமும் அவன் உடல் மீதுபட்டு தோல்கள் எரிவது  போலிருந்தது தொண்டை வறண்டு அவனுக்கு தாகம் எடுத்தது! மெல்ல எழுந்து வீட்டின் மூலையில் மணல் பரப்பி அதன் மேல் வைக்கப்பட்டிருந்த மண்பானையை திறந்தான் சில்வர் டம்ளரில்  தண்ணீர் அள்ளி கையில் வைத்து அழுத்தி அதன் குளிர்ச்சியை உணர்ந்தான்..கன்னத்தில் வைத்து தேய்த்தான்  பின் கை விரல்களின் சூட்டால் நீரின் தன்மை மாறக்கண்டு மெல்ல பருகத் தொடங்கினான் நீரின் குளிர்ச்சி உடலின் உள்ளே ஊறிச்செல்வதை அனுபவித்தான். மிச்சம் இருந்த ஓரிரு துளிகளை தரையில் கொட்டினான் சிமென்ட் தரையில் சொட்டிய நீர் துளி இரு வட்ட உருவங்களை உருவாக்கி அவ...

07 02/2020

அன்புள்ள ஜெ. நூலகத்தில் புத்தரேக்குகளை துழாவும்போது உங்களது ஆழ்நதியைத் தேடி...மற்றும் கண்ணிரை பின் தொடர்தல் ஆகிய இரு நூல்களும் வாசிக்க கிடைத்தன. கண்ணீரை பின் தொடர்தல் இன்று புதிய வாசகர்கள் நிறைபேர் வாசித்திருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன். சமீபத்தில் வாசித்த அக்னி நதி, மீசான் கற்கள், முன்பு வாசித்த நீலகண்ட பறவையைத் தேடி, ஆரோக்ய நிகேதனம், பாத்துமாவின் ஆடு என நான் படித்த ஆறு நாவல்களின் பெயர் அப்புத்தகத்தில் இருந்தது மகிழ்சியளித்தது. மேலும் படிக்க.        நினைத்திருக்கும் மண்ணும் மனி          தரும் நாவல் பற்றிய கட்டுரையும் கூட.. இந்நாவல்களை வாசிக்கும் இளம் வாசகர்களுக்கு அதனை சரியாக தொகுத்துக் கொள்ள, நாவலின் சாரத்தை அணுக உதவும் மிக முக்கியமான கட்டுரைகள் இப்புத்தகத்தில் உள்ளது இதன் சில கட்டுரைகள் தளத்தில் இருக்கிறதென்றாலும் இந்நூல்    கையில் இருப்பது   இன்றைய சூழலில் மிகவும் அவசியமென நினைக்கிறேன்.  ஒரு இலக்கிய கூட்டத்தில் முக்கிய தமிழ் எழுத்தாளர் இருக்கையில் இப்புத்தகத்தைப் பற்றி குறிப்பிட்டேன் அவருக்கே அது தெரிந்திருக்கவி...