இடுகைகள்

மார்ச், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பப்ளிமாஸ் மரம்

 பப்ளிமாஸ் மரத்தடிக்கு முத்து வந்து நின்று அரைமணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. இன்னும் ஜீப் வண்டி வரவில்லை. காலையில் இங்கு சரியாக ஏழைரை மணிக்கு நில் என்றுதான் மரம் வெட்டு ஜேம்ஸ் சொன்னார். சரியாகத்தான் நிற்கிறோமா என்பதை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்தி உறுதிபடுத்திக் கொண்டான் முத்து.  வேறு ஏதும் இடத்தைச் சொல்லியிருப்பார்களா.. என அவனுக்கு தோன்றிய சந்தேகத்தை நீக்க அவனுக்குள்ளேயே முயற்சி செய்தான்.  காலையில்  எஸ்டேட்டுகளுக்கு வேலைக்குச் செல்பவர்கள் அவனைத் தாண்டிச் சென்றார்கள். முகம்  தெரிந்தவர்களைப் பார்த்ததும் அவர்களை சற்று  பார்க்காதது போல நின்று கொண்டான்.  பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் விஸ்ணுவும் அம்முவையும்  பார்த்தவுடன் சற்று பதட்டமானவன் அவர்களைப்  பார்க்காதது போல் திரும்பி நின்றான்.  இவனை சரியாக கவனித்த விஸ்ணு எந்தாடா  பணிக்கிறங்கியோ?  ஸ்கூலில் போகுண்ணில்லே என்றான். அம்மு இவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு பப்ளிமாஸ் மரத்தை பார்த்தாள். அவளது புன்னகையின் அளவு கூடியது. மெல்ல முத்துவை பார்த்துக் கொண்டே நடந்த அம்மூவை  விஸ்ணு நட...