இடுகைகள்

நவம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தனிமையின் பத்து வருடங்கள்

நண்பர்களுக்கு வணக்கம். இதை வாசிக்கும் நீங்கள் அடையப்போவது என்னவென எனக்குத் தெரியவில்லை . இந்த நாவலுக்கு (அ) கட்டுரைத் தொடருக்கு (அ) டைரிக்குரிப்பிற்கு எப்படி வேண்டுமானலும் வைத்துக் கொள்ளுங்கள் மேற்கண்ட தலைப்பில் நான் கடந்த பத்து ஆண்டுகளாக என் வாழ்வில் நடந்தவற்றைத் தொகுத்து எழுதப் போகிறேன். அது ஒரு கட்டுரையாக இருக்கலாம் அல்லது நினைவுக் குறிப்பாக இருக்கலாம். அல்லது ஒரு புனைவாகக் கூட இருக்கலாம். எனது கதையை ஏன் நீங்கள் கேட்கவேண்டும்? வாழ்க்கையில் எவ்வளவோ செய்வதற்கு இருக்கும்போது இதையேன் படிக்கவேண்டுமென நீங்கள் கேட்கலாம் . இதற்கு என்னால் உறுதியாக எந்த பதிலும் அளிக்க முடியாவிட்டாலும் எனக்குள் இருக்கும் உங்களை நீங்கள் சிறிதளவு கண்டு கொள்ளலாம் என்றுமட்டும்தான் சொல்லத் தோன்றுகிறது. இவற்றையெல்லாம் எழுத என்ன வயசாகிவிட்டதா? 27 வயது. ஓடுகிற வயது. வென்றெடுக்க வேண்டிய வயது. இந்த வயதில் ஏன் இப்படியொரு சுய சரிதை என நீங்கள் கேட்கலாம். வயது சிறிதென்றாலும் ஒரு பெரும் வாழ்க்கை அனுபவம் இருக்கிறது. அவற்றை எழுத வேண்டுமென தோன்றுகிறது. எது என் நினைவில் நிற்கிறது? அதன் மூலம் என்னை நான் புரிந்து கொள்ள முயல...

மனிதன் பூச்சியாக மாறுகிறான் காப்காவின் உருமாற்றம் நாவலை முன்வைத்து

ஒரு நாள் காலையில் எழும்போது உங்களுக்குத் தெரிகிறது நீங்கள் ஒரு கரப்பான் பூச்சியாக உருமாற்றம் அடைந்திருக்கிறீர்கள். அப்போது என்னவாக இருக்கும் உங்கள் மனநிலை? எப்படியிருந்தாலும் அது நீங்கள் நினைப்பதற்கு அப்பால்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை . இந்த ஊகத்தோடுதான் அனைவரும் காப்காவின் உருமாற்றத்தை வாசிக்கத் துவங்குவார்கள பிரான்ஸ் காப்கா 1883 ஆம் ஆண்டு பெருநாட்டில் பிறந்தார் என்றாலும் அவர் கதைகள் எழுதியுள்ளது ஜெர்மன் மொழியிலாகும். சட்டப்படிப்பில் பட்டம் பெற்ற அவர் அரசின் காப்பீட்டுத் துறையில் வேலை செய்தார். தொழிளாலர்களிடம் கூடுமான்வ்வரை கருணையுள்ளவராகவும் அவர்களின் உரிமைகளைப் பெற்றுத் தருபவராக இருந்தார். எப்போதும் தனிமையில் வாழ்ந்தார். அவர் ஆளுமையின் ஒன்றாகவே தனிமை அவரிடம் கு டி கொண்டிருந்தது. அத்தோடு காசநோயும் ஒரு எழுத்தாளனின் கொந்தளிப்பும் சேர்ன்து கொண்ட போது தான்பைத்தியக்கார நிலையின் விளிம்பில் அலைத்து கொண்டிருபோதாக அவருக்குப் பட்டது. அவரைடய பல படைப்புகளும் அவருடைய மரணத்திற்கு பின்புதான் வெளியிடப்பட்டது. தன் இறப்பிற்குப் பின் தன் படைப்புகளை எரித்துவிட வேண்டுமென தன் ஆத்ம நண்பரான மா...