இடுகைகள்

அக்டோபர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தீட்சையின் சில படி நிலைகள் குரு நித்யசைதன்ய யதி ( தமிழில் கதிரேசன் )

ஒரு மகாகுருவின் அருகில் ஒரு நல்ல சீடன் ஒருவன் வந்தடைவது தெய்வ கருணையால் எனக் கூறலாம். அதுபோல தங்களுக்கிடையே ஒத்துபோகமுடியாத குருவும் சீடனும் சந்திப்பதைத் தற்செயல் என்றுதான் சொல்லவேண்டும் .அப்படிப்பட்ட இருவர் தற்செயலாக சந்திக்கும் சந்திப்பு இருவருக்குமிடையே நேரம் வீணாவதற்கும் மனது புண்படுவதற்கு மட்டுமே வழிவகுக்கும். குருவும் சீடனும் தம்மில் ஒத்து போகிறவர்களா என்பதை அறிந்துகொள்ள ஒரு தவறு நடக்கமால் வேறு வழியில்லை .சிறிது காலம் குருவும் சீடனும் ஒன்றாக கூடிக்கழித்த காலங்களை திரும்பி பார்க்கும்போது மட்டும்தான் அவர்களுடைய சந்திப்பு நன்மைக்கா அல்லது தீமைக்கா என்று புரிந்து கொள்ள முடியும். நான் மிகச்சிறந்த குரு என கம்பீரமாக மார்தட்டிக் கொண்டு திரிபவர்களுக்கே ஆயிரக்கணக்கிள் சீடர்கள் தேவைப்படுகிறார்கள். இயேசு கிறிஸ்துவுக்கே பன்னிரண்டு சீடர்கள் கிடைத்து இறுதியில் ஒருவரும் உதவவில்லை. குரு சீட உறவில் ஏற்படும் தவறுகள் முரண்பாடுகளைக் களைந்து அவற்றை உபயோகரமாக மாற்றிக்கொண்டு செயல்படுவது அவ்வளவு எளிதல்ல. ஒரு பழுதடைந்த கடிகாரத்தை சரிசெய்ய வேண்டுமானால்கூட கடிகாரம் செய்பவன் அதனை சிறிது நேரம் இ...

காடு

காலையில் எழவெண்பஞ்சு மூட்டைக்குள் எரியும் மஞ்சள் விளக்கு போல் மரக்கூட்டங்களை ஊடுருவிக்கொண்டு சூரியன் பளிச்சிட்டது.நான் மெல்ல இரு கைகளையும் மார்போடு சேர்த்துக்கட்டிக்கொண்டு குளம் நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.புல்லின் நுனியில் சொட்டி நின்ற பனித்துளிகள் கனுக்காலை தீண்டி பாதம் பனியில் நனைந்து   உறைந்து ஊறியது.குளத்தின் மேல்பக்கமாக இருந்த ஈட்டி மரத்தின் அடியில்.செம்மண் பாறையை ஈட்டி மரத்தின் வேர்கள் மலைப்பாம்பு மரத்தை சுற்றி பிணைந்திருப்பதுபோல் பிணைந்திருந்தன.ஈட்டி மரத்தின் உச்சியில் இருந்து இலை   விலகாமல் நேராக பொத்தென்று குளத்தில்    விழுந்தது . அப்பெரிய குளம்   அலையில்லாமல் நிச்சலனமாய் இருந்தது .எதிர் புறம் இருந்த நாணல் புற்கள் கூட அசையாமல் நின்றிருந்தது. குயிலின்   அகவலைப்போல     அச்சத்தம் காட்டின் உள்ளே இருந்து மேலே எழும்பி வந்தது.சிறிது நேரத்தில் காட்டையே நிறைத்துக்கொண்டது நான் மெல்ல எழுந்து அந்த குரல் வந்த திசையை நோக்கி போனேன் தங்கப்பன் இன்னும் எழுந்திரிக்கவில்லை நேற்று இரவு முள்ளம்பன்றி இறைச்சியையை இரவு இரண்டு மணிவரை தின்று கொண்டிருந்தான் நான்...

கோட்டையை திறப்பதற்கான சாவி- வாசிப்பது எப்படி நூல் வாசிப்பனுபவம்

 வாசிப்பு குறைந்து விட்டது எனச் சொல்லிக் கொண்டிருக்கும் பெரும்பாலனவர்களுக்கு மத்தியில் ஜெயமோகன் ஒரு பேட்டியில் சொன்னார். முன்பைவிட  இன்று வாசிப்பு அதிகமாகியிருக்கிறது.... முதலில்  கேட்க அதிர்ச்சியாக இருந்தாலும் அதற்கு அவர் முன் வைத்த சான்றுகளை ஆராய்ந்தபோதும்  சுற்றியிருப்பவர்களை சற்று கூர்ந்து அவதானித்தபோதும்  அக்கூற்று சரிதான் என்றே சொல்லத்தோன்றியது.  இணையம், சமுகவலைதளங்கள்  நமது விருப்பங்களுக்கு ஏற்ப  செய்திகளை அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. சாதரண செய்தி கூட பலவகையில்  திரித்து படிக்கவைக்க வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டு நம்மை வந்தடைந்து கொண்டிருக்கிறது. இதனை திட்டமிட்டு  பல்வேறு நோக்கங்களுக்காக உருவாக்குகிறார்கள். இவற்றைத் தவிர்த்து நல்ல நூல்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது நமது தேடலை வளர்த்துக் கொள்வது என்பது இன்றைக்கு நம் முன் இருக்கும் சவால். ஒன்றை தெரிந்து கொள்ளாமல் இருப்பதைவிட தவறாக தெரிந்து கொள்ளும் ஆபத்து இன்று அதிகமாக இருக்கிறது.  பொதுவாக அறிவியல் மற்றும் தத்துவ நூல்களை தொடர்ந்து படிப்பவர்களுக்கு ஒன்று தெரியும் . அங்...