இடுகைகள்

ஜூலை, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நதிக்கரை சிறுகதை விவாத நிகழ்வு

படம்
நதிக்கரை சிறுகதை விவாத நிகழ்வு - கதிரேசன் நதிக்கரை இலக்கிய வட்டத்தின் ஒரு சிறப்பு கூட்டம் இன்று திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறுகதை வடிவம், சிறுகதைக்கான தோற்றம், ஆரம்ப கால சிறுகதைகள், நவீனத்துவ பின்நவீனத்துவ சிறுகதைகள், அதன் போக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழில் பாரதி தொடங்கி தற்கால இளம் எழுத்தாளர்கள் சிறுகதைகள் வரை பேசப்பட்டன.சிறுகதையின் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்,வளர்ச்சி போக்குகள் என ஒரு ஒட்டு மொத்த சிறுகதைகள் குறித்த விவாதமாக  இக்கூட்டம் இருந்தது.  எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் சிறுகதைகள் தோற்றம் குறித்தும் எட்கர் ஆலன்போ, ஓ ஹென்றி முதலான ஆரம்பகால எழுத்தாளர்கள் குறித்தும் மேலைநாடுகளில் பிரபுக்குடும்பங்களில் சிறுகதைகள் ஒரு கேளிக்கை நிகழ்வாக சொல்லப்பட்டது குறித்தும் சொன்னார். ஆசிரியன் கதை சொல்லும்போதே கேட்பவர்கள் கதையின் முடிவை தாங்களாகவே ஊகித்துக்கொண்டு கதையை பின்தொடர்வார்கள். கதை சொல்லியின் சவால் என்பது வாசகன் ஊகிக்கும் அத்தனை முடிவுகளையும் தாண்டி அவன் முற்றிலும் எதிர்பார்க்காத வேறொரு முட...

புலிநகக்கொன்றை நாவல் ஒரு பதிவு

படம்
புலிநகக்கொன்றை நாவல் ஒரு பதிவு திருநெல்வேலியில் வாழும் வடகலை   ஒரு ஐயங்கர் குடும்பத்தின் நான்கு தலைமுறை வராலாறோடு தமிழகத்தின் குறிப்பாக திருநெல்வேலி தூத்துக்குடியின் வராலாற்றையும் சொல்லும் நாவல் புலிநகக்கொன்றை, ஐங்குறுநூறில் வரும் அம்மூவனார் பாடல் 142 லிருந்து இந்நாவலுக்கான தலைப்பை எடுத்திருக்கிறார் பி அனந்தகிருஸ்ணன் எனும் பி ஏ கிருஸ்ணன். கிட்டத்தட்ட ஒரு வரலாற்று நாவல் தான். பொதுவாக வரலாற்று நாவல்களில் காணப்படும் பிரம்மாண்டம் இந்நாவலில் இல்லை. கதையிணூடே ஊடுபாவும் சம்பவங்கள் அனைத்தும் கதாபாத்திரங்களிலிருந்து தனியே சொல்லப்படமால். கதாபாத்திரங்களுக்கு வரலாற்றுச் சம்பவங்களால் ஏற்படும் பாதிப்பை கொண்டு கதை நீங்குவது சிறப்பான   உத்தி…. காதாபாத்திரங்களில் பெரும்பாலானாவர்கள் இலட்சியவாத கொள்கைகொண்டவர்களாகவே இருக்கிறார்கள். ஒருவகையில் அப்படிப்பட்டவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து முக்கிய கதாபாத்திரங்களாக மாற்றினாரா என்று தெரியவில்லை. இது ஒருவகையில் நாவலின் இயல்புத்தன்மையை பாதிக்கிறது.   உண்டியல் வீட்டில்   வாழும் அனைவருக்கும் ஒவ்வொரு தலைமுறையிலும் ...
படம்
சம்ஸ்காரா மார்த்தவ (தூய) பிராமணர்கள் கூடி வாழும் துர்வாசபுர அக்ரகாரத்தில் நாரணப்பா ஒழுக்கங்கெட்ட பிராமணனாக வாழ்கிறான்.மாமிசம் உண்ணுகிறான்,தாழ்ந்த சாதி பெண்ணாண சந்திரியுடன் உடலுறவு கொள்ளுவதோடு மட்டுமல்லாமல் அவளை அக்ராகாரத்திலே தங்க வைக்கிறான் .குளத்தில் மீன் பிடிக்கிறான். எந்த பிராமணனும் அவனை எதிர்த்து கேட்க முடிவதில்லை கேட்டால் முசல்மானாக (இஸ்லாமியனாக) மாறிவிடுவதாகச் மிரட்டுகிறான்.   தன் சொத்தையெல்லாம் பறித்து கொண்டு ஏமாற்றிய கருடாச்சாரியாவுக்கு எதிராக திரண்ட நாராணப்பாவின் கோபமே மொத்த பிராமணியத்திற்கும் எதிரானாதாக திரும்புகிறது என்று ஊகிக்கமுடிகிறது.. பிராமணர்களின் பிள்ளைகளை பட்டாளத்திற்கு அனுப்புகிறான். குடியும் கூத்தும் பெண்ணும் என அவ்வாரகார மக்களுக்கு சிம்மசொப்பனமாக நடக்கும் அவன் கொஞ்சம் பயப்படுவது மறியாதை கொடுப்பது பிரேமாச்சாரியாருக்கு மட்டுமே. காசிக்கு   சென்று வேதம் படித்து வந்தவர்.   தன் நோயுற்ற மனைவியை பராமரிப்பதும். முறையான விரதம், சந்தியாவந்தனம் வேதம். இதிகாசங்களை விளக்குவது ஆகியன   மட்டுமே தன் வாழ்வியல்   கடமையாக கொண்டவர்.த...
படம்
(சிறுகதை)   புதிய சிலுவை   ஏறுவெயில் மலையின் உச்சியில்    ஏறி நின்றிருந்தது. ஆடுகள் காலை மேய்ச்சலை முடித்திவிட்டு ஈட்டி மரத்தின்    உச்சி நிழல் விழும் மந்திப் பாறையின் அடியில் பதுங்க துவங்கியிருந்தன.   நடமாட்டமில்லாதலால் மண் ரோட்டிலிருந்து மலைக்கு     ஏறும் பாதை கோறைப்புற்களால் மூடியிருந்தது. அமண மலையிலிருந்து கிழக்கு நோக்கி வீசிய காற்றில்    ஈட்டி மரமும் மஞ்சனெத்தியும் கோரைப்புற்களும் அவன் வருகைக்கு இசைவு தெரிவித்து உடலைச் சிலுப்பின, அவன் மெல்ல கைத்தடியால் கோரைபுற்களை விலக்கி விட்டுகொண்டு மலையேறத்துவங்கினான். ஓணானும், அரணைகளும், பூச்சிகளும் புதிய உயிரின் வருகையைக் கண்டு தங்கள் வழக்கமான இடத்தை விட்டு நகரத்துவங்கின. மலைமேல் பிடித்து ஏறிச்செல்லும் கைபிடிப்பாறையை புற்கள் மூடியிருந்தன. அவற்றை விலக்கி மேலே செல்வதற்கு    இடப்பட்டிருக்கும் வழிகாட்டி அம்புக்குறியை தேடினான். அது   பாறையின் இடது பக்க மூலையில் தேய்ந்த   நீல வண்ணத்தில் கலந்து   மேல்நோக்கி இடப்பட்டிருந்தது.      அவன் ...

அஞ்சலை நாவல் ஒரு பதிவு

படம்
கண்மணி குணசேகரனின்    அஞ்சலை நாவலை   இரண்டாவது முறையாக படித்து முடித்தேன். பொதுவாக இயல்புவாத படைப்புகள்   பெரும்பாலும் வாசிப்பு சுவாரசியம் குறைவானதாகவும்   கதைகூறலே பிரதானமாக இருக்கும். ஆனால் அஞ்சலையை ஒவ்வொரு பக்கத்தையும் விருவிறுப்பாகவும் கண்ணீரும் கம்பலையுமாக படித்துமுடித்தேன் தமிழில் நவீன இலக்கியத்தில் ஒரு பெண் கதா பாத்திரம் எப்படி இந்த அளவிற்கு   பாதிப்பை ஏற்ப்படுத்தியது என்பதை நினைத்து பார்க்கும் போது ஆச்சரியமாய்! இருக்கிறது. என்னளவில் நான் படித்த தமிழ்நாவல்களில் மிகச்சிறந்த பெண் கதா பாத்திரம் கொண்ட நாவல் என்றால் அஞ்சலை தான். “புகைய ஆரம்பிப்பதற்கு முன்பே அணைத்துவிடாலாம் என்று தான் பாக்கியம் நினைத்தாள்.”   என்ற வரியில் நாவல் துவங்குகிறது ஆம் எல்லா   அம்மாக்களும் தங்கள் பெண் பிள்ளைகளைப்பற்றி அப்படித்தானே நினைக்கிறாள்! இதனை படித்தவுடனே ஒரு வயது பெண்ணின் கதை இது என தோன்றிவிடுகிறது அஞ்சலையும் ஆண்டை மவனையும் பற்றிய பேச்சு புகைய ஆரம்பித்ததும்.அஞ்சலைக்கு தீவிரமாக பெண் தேடுகிறாள் தாய் பாக்கியம். பாக்கியத்தின் தம்பி (அஞ்சல...